மனக் குரங்கு

குரங்கு அடிக்கடி கிளை விட்டு கிளை தாவும். ஏன் மரம் விட்டு மரம் தாவுவதும் அதற்கு அத்துப்படி. அதற்கு பல வேளைகளில் புரிவதில்லை எது சரி எது பிழை என்று. அதனால் தான் என்னவோ அது சரியென்று நினைத்து செய்யும் பல செயல்கள் பிழையாகிப் போனாலும் அதை ஏற்க அது மறுக்கிறது. அதனால் தானே அது ஒரே தவறை பலமுறை செய்கிறது. இது போன்ற செய்கைகளுக்கு உதாரணத்தின் தனித்துவம் குரங்காராய் தான் இருக்க முடியும். சும்மாவா நம் முன்னோர்கள் சொன்னார்கள் " குரங்கு கையில் பூ மாலை போல் " என்று. பூமாலை கிடைத்த குரங்கு அந்த பூ மாலையை என்னென்ன வெல்லாம் செய்யும் என்று நான் சொல்லித் தன் தெரிய வேண்டியவர்கள் அல்லர் நீங்கள். ஏனைய ஐந்து அறிவு ஜீவிகளுடன் ஒப்பிடுகையில் குரங்குக்கு ஒரு தனித்துவமான் இடம் நிச்சயம் உண்டு என்பதில் மறுப்பதற்கு இல்லை. வித்தைகள் காட்டி சீவனம் நடாத்தும் குரங்காட்டியிடம் உள்ள குரங்கு மட்டும் ஏதோ வித்தியாசம் தான். ஏனெனில் அதற்கு தெரிகிறது நாம் வெளியில் தனியே சென்று பழக்கப்பட்டவனும் கிடையாது , கூட்டமாக வாழ்ந்த முன் பின் அனுபவங்களும் கிடையாது. எனவே எஜமான் சொல்வதை கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. கேட்...