கவிதைப் பதிவு - 1



நிஜம்

கண் மூடியும் தூக்கமில்லை
மனதில்
எம் கசப்பான அநுபவங்கள்

புரிகிறது

நீ விளையாட்டாக சீண்டியவைகளும்
அர்த்தம் தருகின்றன,
உன் பிரிவுக்கு பின்னால்......


யதார்த்தம்

உண்மைகள் கசப்பதும்
எதிர்ப்பார்த்த உறவுகள் அகல்வதும்
ஞாபகங்கள் வலிப்பதும்
தான் உலக நியதி எனின்
யாரால் முடியும் அதை மாற்ற
அந்த இறைவனைத் தவிர.....


ஒப்புவமை

நிலவையும் பெண்ணையும்
உவமிப்பது சரிதான்
காரணம்?
இரண்டுமே புரியாத புதிர்கள் !!!!


தாமதமான உண்மை

நீ நான் என்றாய் அன்று
உணர்கிறேன் இன்று,
நான் நீயாக இருந்திருக்க கூடாதா என்று !!!!


மௌனி

உன் விடயத்தில் மௌனியானேன்,
நடப்பது எல்லாம் ந்ல்லதுக்கே
என் மனதை தேற்ற.........

தேடல் படலம்

பதில் தேடும் வேட்டையில் நான்
ஏன் என் சந்தோசம்
சிறை வைக்கப்பட்டது?
என்பதற்கு.........




Comments

Popular posts from this blog

Unknown facts in a known sector

Taking notes on the 250th -SLC

Through my LeNsEs