அநுபவப் பகிர்வு - 1 கண்டிக்கு நாங்கள் புதிது





அநுபவப் பகிர்வு - 1

கண்டிக்கு நாங்கள் புதிது



இலங்கையிலே எல்லா விடயங்களையும் ஒரே ஊரிலேயே பெற்றுக் கொள்ள முடிவதில்லை, என்பதை நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ளத் தேவையில்லை என்பது யதார்த்தமான உன்மை. இலங்கையர் என்ற வகையில் எல்லோரும் ஏதாவது ஒரு தேவை நிமித்தம் எப்போதாவது ஒரு நாளிலாவது கொழும்பை நோக்கி படையெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேரிடும்.இதற்கு நான் மட்டும் விதிவிலக்கள்ள. ஆனால் இந்தப் பதிவோ கொழும்பைப் பற்றியதல்ல. இது கண்டியைப் பற்றியது.


2005ம் ஆண்டளவில் எமது பிரதேச பாடசாலையில் கணித, விஞ்ஞானப் பிரிவுகள் இல்லாத படியால் பிற பிரதேசங்களுக்கு சென்று எம் உயர்தர கல்வியை தொடர வேண்டிய துர்ப்பாகிய நிலை. நானும் எனது மூன்று நன்பர்களும் (பலரும் படித்தனர், இருப்பினும் இவர்கள் 3 பேரும் பால்ய சிநேகிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ) சிதறிச் செல்ல வேண்டிய நிலை, இருப்பினும் மனதோரத்தில் சிறியதாகஒரு சந்தோசம், ஏனெனில் நால்வரும் கண்டிக்குத் தான் மேலதிக வகுப்புகளுக்கு வர வேண்டும்.


நான் நாவலப்பிட்டியவுக்கும், ஒரு நன்பன் கண்டி புனித அந்தோனியார் கல்லூரிக்கும், மற்றைய இருவரும் மாத்தளைக்கும் சென்றோம்.(அவ்விருவரும் நாம் சென்று ஒரு மாதத்தின் பின் தான் பாடசாலை செல்ல நேர்ந்தது.) நானும், கண்டிப் பாடசாலை நன்பரும், முதலில் மேலதிக வகுப்புகளுக்கு சென்று வர ஆரம்பித்தோம். அப்போதைய நேரத்தில் எல்லா பாட வகுப்புகளும் ஒரே இடத்தில் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிட்டு நோக்கத்தக்கது.


இன்று மாத்தளை நன்பர்கள் இருவரும் வகுப்புக்கு வரும் முதல் நாள். நாங்கள் கண்டிக்கு ஒரு மாதம் பழையவர்கள் என்பதால், அவர்களுக்கு வழி காட்ட வேண்டிய கடப்பாடு. சனிக்கிழமை முதல் வகுப்பு மதியம் 1 மணிக்கு, இலங்கையிலேயே பிரபல இரசாயணவியல் ஆசானின் வகுப்பு அது. கட்டிடத்தின் முதல் மாடியில் கிட்டத்தட்ட 700 மாணவர்கள் இருக்கலாம். வரிசையில் நின்று அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறி அவர்களுக்கும் வழிகாட்டி விட்டு, பொருத்தமான இடத்தினை தேடிப் பிடிக்கையிலேயே உயிர் போய் திரும்பும். (அதன் பின்பும் படிப்பது என்பது கேள்விக்குறியே !) வகுப்பு முடிய மாலை ஐந்து மனியையும் தாண்டியது. இப்போது அந்த நன்பர்களுக்கும் தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்யும் நோக்கில் கண்டி மாநகர சபையையும் தாண்டி நடந்து சென்று கொண்டிருக்கையில், இடைத்தெருவிலிருந்து ஒரு குறள், "தம்பி class போய்விட்டு வாரீங்களா?", "ஆம்" என்ற படி பின்னால் திரும்பினால் ஒரு உயர்ந்த கருத்த உருவம் புன்னகையுடன்.


"தம்பி நான் உங்கட class ல உள்ள girl ஒண்ட தான் love பன்னுறேன், எனக்கு tamil ல ஒரு love letter எழுதி தரனும். முடியுமா?" என்ற படி அந்த உருவம் எங்களை ஏற இறங்க பார்த்துக் கொண்டிருந்தது. நாங்களும் முகத்தை முகம் பார்த்து விட்டு ஆமாம் சமி சொல்லவே, அந்த உருவம் "வாங்களே, அந்த municiple பக்கம் போவோம்" என்றது. அவ்விடத்தை அடைந்ததும், எங்களிடம் ஊர் பெயர் எல்லாவற்றையும் பாசத்துடன் விசாரித்து விட்டு சொன்னது,"தம்பி எனக்கு love letter ஒன்னும் வேனாம், எண்ட phone ஐ ஈடு (அடகு)வச்சிருக்கிரேன்" என்றதுமே நான் என் விலை உயர்ந்த மணிக் கூட்டை என் பாக்கெட்டில் எடுத்து வைத்தேன். அதை அவன் பார்த்ததையும் உணர்ந்த எனக்கு ஒரே பயம்!!


அவன் பேச்சைத் தொடர்ந்தான்."அந்த ஈட்டை திருப்ப அவசரமாக 5000 ரூபா பணம் தேவை. எண்ட friend வாரதாக சொன்னான், இன்னமும் காணல்ல. அதால இப்ப நீங்க தந்தா, நா உடனே திருப்பி விட்டு எண்ட friend வந்ததுமே தந்துடுறேன்". உடனே எங்களுக்கு புறிந்து நாங்கள் விலக எண்ணும் போதே, இடுப்பிலிருந்து ஒரு கத்தியை எடுத்து என் நன்பன் ஒருவனது வயிற்றுக்கு அருகாமையில் வைத்து "கத்தினா தெரியும் தானே...." என்று பயமுறுத்தினான். அவனுக்கு அடித்து விட்டு நால்வரும் தப்பிப்பது என்பது சிறிய விடயமென்றாலும், அது புதிய இடம் என்ற படியாலும், அவன் சுற்றிலும் அவனது ஆட்கள் நிற்பதை காட்டியதாலும், நாங்கள் அவன் சொன்ன படியே நின்றோம்.எங்களைப் பார்த்து "அவன் அவண்ட purse ஐ எடுங்க பார்ப்போம் " என்றான்.


முதலில் ஒருந்த நன்பனிடம் அவனது purse இலிருந்து 2000 ரூபாயையும், இரண்டாவதாக இருந்தவனிடம் 1000 ரூபாயையும் எடுத்து விட்டு என் மற்றைய நன்பனை நோக்கி திரும்பினான்.
அவனைப் பார்த்து "நா உனக்கிட்ட எடுக்க மாட்டேன், நீ என்ட தம்பிய மாதிரியே இருக்கிறாய் " என்றான். உடனே எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அடக்க முடியாத சிரிப்பு. வந்த சிரிப்பை வாய்க்குள்ளே அடக்கம் செய்தவர்களாய் அவனை நோக்கினோம். இப்போது எனது முறை. என்னை நோக்கிய படி "உனக்கிட்ட நா சல்லி எடுக்க மாட்டேன்" என மொட்டையாக , அர்த்தம் சொல்லமல் கூறவே எல்லோர் மனதிலும் ஓர் ஆவல், காரணம் அறிய. பின் அவன் "எல்லாம் வா போவோம்" என அழைப்பு கொடுத்து நடக்கலாயினான். சிறிது தூரம் நடக்கையிலே அவனது தம்பியான என் நன்பனிடம் "பஸ் க்கு போக 6 ரூபா தா" என வேண்டினான். அவனும் அதை கொடுத்த சீக்கிரத்திலேயே மின்னலென மாயமானான். இதை இப்போது நினைக்கும் போது வடிவேலு comedy தான் ஞாபகத்திற்கு வருகிறது.


அவன் என் நன்பனை தம்பி எனக் கூறியது கூட பரவாயில்லை. என்னிடம் பணம் வேண்டாமெனக் கூறியது தான் எல்லோருக்கும் ஆச்சரியம். பிறகு தான் எனக்கு புறிந்தது நான் மணிக்கூட்டை ஒழித்ததை அவன் பார்த்தது.ஒரு வேளை நான் இதற்கு முன்பே நான் இது போன்றதொருஅநுபவத்தை நான் பெற்றிருக்க கூடும் என அவன் எண்ணியிருக்கலாமோ? என்னவோ?


நாம் கண்டிக்கு மிகவும் பழகிவிட்ட பின், கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பின், நானும் என்னுடைய வேறொரு கண்டி நன்பனும் அதே பாதையில் சென்று கொண்டிருக்கையில், மறுபடியும் நமக்கு பழக்கப் பட்ட முகமான அவன், வேறு இருவரை வைத்துக் கொண்டு, எமக்கு அநுபவம் தந்தது போலவே அவர்களுக்கு கொடுக்கும் நோக்கதில் அவர்களுடன் கதைத்துக் கொண்டிருப்பதை கண்டேன். இந்த முறை அவன் முன்னேறியிருந்தான், ஒரு ஆட்டோவில் வந்திருந்தான். உடனே நானும், அந்த நன்பனும் "என்ண்டா ........................... (சிங்கள அகராதியில் இல்லாத சொற்கள்)" என அவனை நோக்கி ஓடவே அவனும் ஆட்டோவில் விரைந்தான். இறுதியில் ,மனதிலொரு சந்தோசம் , ஆபத்திலிருந்த இருவரை காப்பாற்றியது.......

Comments

  1. நல்ல கற்பனை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ Nizam..............இது கதையல்ல நிஜம் !!!!!!!!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Unknown facts in a known sector

Taking notes on the 250th -SLC

Through my LeNsEs