அந்த ஒரு கணம்
அந்த ஒரு கணம்

பரபரப்பான அந்த காலையில்
நேரமோ ஒரு ஏழு இருக்கும்
office வேலைகள் ஒவ்வொன்றாக
ஒரு presentation ஒரு discussion
ஒரு filed visit ஒரு interview என
எல்லாமே அவன் கண் முன் தோன்ற
அவனோ
யார் யாரையோ அநியாயத்திற்கு திட்டியபடி
பலதோடு ஒன்றாக
காலி வீதியில்
தனிமையில் காரை செலுத்தும் ஜீவன்,
தற்போதைக்கு தனிமரம்
இரண்டு மூன்று நாட்களாக
கவனிப்பாரற்றவனாய்
வயிற்றைக் கூட நிரப்ப மறந்தவனாய்
எது செய்வதென்று அறியாமல் பேதலித்தவனாய்
ஆயிரம் கற்பனைகளோடு
ஒரு வேற்று கிரகத்திலே வாழ்க்கையை ஓட்டியவனாய்
காரணம் ஏனோ?
தலைப் பிள்ளையைப் பெற்றெடுக்கும் பிரயாச்சித்தத்தில்
அவன் மனைவி ஆஸ்பத்திரியில்
இதற்கிடையே காருக்கு கட்ட வேண்டிய leasing
ஒரு பக்கம்
உயிர் நண்பனுக்கு பணவுதவி செய்ய வேண்டிய கட்டாயம்
ஒரு பக்கம்
அடுத்த மாதம் மணவாழ்க்கையில் இணையப்போகும் தங்கை
ஒரு பக்கம்
பிள்ளையின் ஏழாம் நாளை விமர்சையாக கொண்டாட
வேண்டுமென்ற தம்பதியினது அவா
ஒரு பக்கமென
பற்பல பணச்சுமைகளை சுமந்தவனாய் அவன்
இபடியே நினைத்துக்கொண்டே செல்லும் அவனை
யாரோ தடுத்து நிருத்தியதை அவனும் உணரவே
திடுக்கிட்டு நினைவுக்கு வரவே சுற்றும் பார்க்க
அலரியபடி நின்றது அவனது செல்லிடப்பேசி
கார் என்றபடியால் speaker phone ஐ செயற்படுத்த
மறுமுனையில் அவன் அத்தை
"மகன், பிள்ளையை operation theatre க்கு எடுத்திட்டவங்க
பகலைக்கு வரேக்க delivery ஆகிடும்"
செய்தி கேட்டதும் சந்தோசத்தில் அவன் தனக்குள்ளே
சிரித்து பெருமிதம் கொள்கிறான்
தன் உயிர் உலகை பார்க்க போகிறது
என்று இருந்தாலும், ஒரு கவலை மனதில்
cesarean என்றால் மனைவிக்கு ஆபத்தோ? என்று
விஞ்ஞான வளர்சியால் சுகப்பிரசவங்கள் குறைந்து
செயற்கைப் பிரசவங்கள் அதிகரித்து விட்டன
என்பது நிதர்சனம்
அவனையே தேற்றியவனாய் office ஐ அடைகிறான்
அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல்
அரைநாள் வேலையிலும் கால்வாசியை முடித்துவிட்டு
சுடுமூஞ்சு மேனேஜருக்கு முன்னால் பத்திற்கே
ஆஜராகிவிடுகிறான்
அவரிடம் திட்டு வாங்கியபடியே அவசரம் அவசரமாக
வண்டியை ஆஸ்பத்திரி நோக்கி செலுத்துகிறான்
காலையில் அவன் முன் தோன்றிய அதே தொடர்கதைகள்
மறு ஒளிபரப்பு செய்யப்படவே, சுதாரித்தவனாய்
தொடர்கிறான் பயணத்தை
தனியார் மருத்துவனை என்பதால் கெடுபிடிகள் இல்லை
விரைகிறான் மனைவியை நோக்கி........
மனைவியோ சிரித்த முகத்துடன்,
அவனையே எதிர்ப்பார்த்தவனாய்
கட்டிலில் கிடக்கிறாள்
சிரித்துக் கொண்டே மனைவியிடம் சென்று,
அவள் தலையை தடவிக் கொடுக்க
வேதனை சற்று தனிந்ததை உணர்ந்த
அவளும் கண் ஜாடை செய்கிறாள் வலது பக்கமாய்
ஆர்வத்துடனே நோக்க அவனுக்கு ஆச்சரியம்
அவனே தொட்டிலில் கிடப்பதை உணர்ந்தவனாய்
கையும் காலும் படபடக்க கண்கொட்டாமல்
பார்த்துக்கொண்டவனாக
அந்த பிஞ்சை கையில் எடுத்தவனாய்
அதன் நெற்றியில் முத்தமிடுகிறான்
என்ன ஆச்சரியம், அவன் திடீரென கஷ்ட கனவுலகத்திலிருந்து
மீள்வதை உணர்கிறான்
வேலை என்ன வேலை?
பணம் என்ன பணம்?
கஷ்டம் என்ன கஷ்டம்?
என எல்லாவற்றையும் அவன் தங்க மகனால்
மறக்கிறான் அவன் சுமைகளை
அப்போது உணர்கிறான்
அந்த விலை மதிப்பற்ற கணத்தை.............
Comments
Post a Comment