தனிமை எனும் கொடுமை மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே,மனிதனானவன் இன்னல்களையும், கஷ்டங்களையும் அனுபவித்தே வந்துள்ளான் என்பதில் துளி கூட ஐயமில்லை. அவனது நிலமைகள், அவனது சூழல் என்பவற்றிற்கேற்ப அவனது இன்னலின் அல்லது கஷ்டத்தின் தாக்கம் என்பன வேறுபடலாம்.எ னினும் மொத்தத்தில் எவருக்கும் கஷ்டங்களை, இன்னல்களை முகங்கொடுக்க நேர்ந்திருக்கும். அதே போல எந்த மனித ன், நான் என்ன செய்கிறேன்? எவரிடம் போய் என் நிலமையை பகிரப் போகிறேன்? அடுத்து என்ன செய்வது? என பல்வேறுபட்ட கேள்விக்கணைகளை தன்னுள் தொடுத்துக் கொள்ளும் உணர்வு தான் தனிமை என புரிகிற பாஷையில் சொல்லி விடலாம். எனினும் பொதுமைப்பாட்டில் நோக்குமிடத்து தனிமை என்பதை மிகத் திருத்தமாக வரையறுக்க முடியா விட்டாலும், எவனொருவன் தனது கஷ்ட நஷ்டங்களை, துன்ப துயரங்களை பகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லையே என அங்கலாய்க்கும் உணர்வையே தனிமை என சுருங்கக் கூறி விடலாம்.அதை உணர்வு என சொல்வதில் எனக்கு உடண் பாடில்லை. ஏனென்றால் அதை உணர்வு எ ன்று சொல்வதற்கு பதிலாக ஒரு துர்பாக்கிய நிலை என குறிப்பிடுவது சாலச் சிறந்தது. தனிமை என்பது எந்தளவுக்கு சக்தி வாய்ந்தது என்றால் எவரை வேண்டுமென்ற...