தனிமை எனும் கொடுமை




மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே,மனிதனானவன் இன்னல்களையும், கஷ்டங்களையும் அனுபவித்தே வந்துள்ளான் என்பதில் துளி கூட ஐயமில்லை. அவனது நிலமைகள், அவனது சூழல் என்பவற்றிற்கேற்ப அவனது இன்னலின் அல்லது கஷ்டத்தின் தாக்கம் என்பன வேறுபடலாம்.எனினும் மொத்தத்தில் எவருக்கும் கஷ்டங்களை, இன்னல்களை முகங்கொடுக்க நேர்ந்திருக்கும். அதே போல எந்த மனிதன், நான் என்ன செய்கிறேன்? எவரிடம் போய் என் நிலமையை பகிரப் போகிறேன்? அடுத்து என்ன செய்வது? என பல்வேறுபட்ட கேள்விக்கணைகளை தன்னுள் தொடுத்துக் கொள்ளும் உணர்வு தான் தனிமை என புரிகிற பாஷையில் சொல்லி விடலாம். எனினும் பொதுமைப்பாட்டில் நோக்குமிடத்து தனிமை என்பதை மிகத் திருத்தமாக வரையறுக்க முடியா விட்டாலும், எவனொருவன் தனது கஷ்ட நஷ்டங்களை, துன்ப துயரங்களை பகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லையே என அங்கலாய்க்கும் உணர்வையே தனிமை என சுருங்கக் கூறி விடலாம்.அதை உணர்வு என சொல்வதில் எனக்கு உடண்பாடில்லை. ஏனென்றால் அதை உணர்வு என்று சொல்வதற்கு பதிலாக ஒரு துர்பாக்கிய நிலை என குறிப்பிடுவது சாலச் சிறந்தது.

தனிமை என்பது எந்தளவுக்கு சக்தி வாய்ந்தது என்றால் எவரை வேண்டுமென்றாலும் எதை நோக்கியும் தள்ளி விடக் கூடியது. அது உலகத்தையே உலுப்பி விடக் கூடிய புரட்சி தொட்டு உலகையே அழிக்க கூடிய பாதக செயலாகக் கூட இருக்கலாம். தனிமையே, மனித குலமே வெறுக்கக் கூடிய அகல பாதக செயல்களான கொலை,கொள்ளை,மது,மாது,சூது என எல்லாவற்றிற்கும் வித்திட்டது எனின் அதில் துளி கூட ஐயமில்லையெனலாம். ஏனெனில் இன்றைய காலத்தில் நடக்கக் கூடிய கொடூரங்கள் அதையே உணர்த்தி நிற்கின்றன. பெற்றோரின் வளர்ப்பிலிருந்து தூரமாக்கப்படும் விடலைப் பருவ இளசுகள், விடலைப் பருவத்தில் ஏற்படும் எதிர்ப் பாலின கவர்சியின் விளைவுகள், பெரியவர்களல் திணிக்கப்படும் அவனுக்கு பிடிக்காத செயல்கள், இன்னும் சில என அனைத்துமே அவனை தனிமை என்பதிற்குள் சிக்க வைத்து அதன் மூலமாக அவன் தப்பான பாதைக்குள் அவனுக்கு தெரிந்தோ தெரியாமலோ
தள்ளிவிடப்படுகிறான்.



மனிதன் பிறக்கும் முன்பே அவனது தாயின் கருவரையினுள் தனிமையை முதலில் அனுபவிக்க நேர்கிறது. எனினும் அது அவனை வாட்டாது என எடுத்தாலும், அது தான் தனிமையின் முதற்கல். அது தொட்டு அவன் கல்லறைக்கு போய் சேரும் வரை,ஏன் கல்லறையில் கூட தனிமை எனும் கொடுமையை அனுபவித்துக் கொண்டே இருப்பான். அவன் வளரும் காலங்களிலும், அவன் பள்ளி செல்லும் காலங்களிலும், விடலைப் பருவத்திலுமே, அவனைத் தனிமை விரட்டி விரட்டி தொடர்ந்து அவனை கொடுமைப் படுத்துகிறது இந்தத் தனிமை.
அதிலும் முதன்மையாக விடலைப் பருவ தனிமையே வெகு சக்தி வாய்ந்தது.

இன்றைய இயந்திர உலகத்திலே, ஒரு நாளில் 24 மணி நேரம் கூட போதாதே என அங்கலாய்க்கும் பெர்றோர்களால் கேட்பார் இன்றி கைவிடப்படும் இளசுகள் தனிமையில் தொலைக்கட்சி, இணையம் என்பவற்றில் உள்ள தீயதின் பக்கம் மனம் போகவே அவனும் அதற்குப் பின்னாலே இழுத்து செல்லப்படுகிறான். ( இளசுகளை வழிகெடுப்பதில் தொலைதொடர்பு சாதனங்களின் பங்கு குறித்து
நோக்கத் தக்கது.)
அதிலே வரும் காதல், காமம், பாதக செயல்கள் என எல்லாவற்றிற்கும் பரிசோதனை ரீதியிலான செயல் வடிவம் கொடுக்க நினைக்கும் அவனது துடி துடிப்பான இதயத்தினை மட்டும் குற்றம் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? ஏனெனில் அதையே நாங்கள் வயசுக் கோளாறு என ஒரு வார்த்தையில் பதில் சொல்கிறோம். தனக்கு பெற்றோரிடம் கிடைக்காமல் போன அன்பை, வேறு ஒரு இடத்தில் தேடும் போதும், அவனது வேட்டையில் சிக்குவது எதிர்ப்பாலினமே. காதல் என்ற போர்வையில் ஹோர்மோங் களின் விளையாட்டால் தூண்டப்படுமெதிர்ப்பாலின கவர்சியை எந்த ஒரு ஆணோ பெண்ணோ தேடிச்செல்ல நேர்கிறது. அது கிடைத்தால் அவனுக்கு இன்பம், இல்லாவிட்டால் அதையே எப்படியோ அநாகரிகமான முறையிலாவது, அது நூற்றுக்கு இருநூறு பிழை என்றாலும் அதை நோக்கி அவன் பார்வை திரும்புகிறது. அதன் விளைவே கற்பழிப்பு,கள்ளக்காதல்,கடத்தல் என்பன. மாறி
அவனுக்கு கிடைத்த பாசம், அன்பு அவனிடமிருந்து கை தவறும் போது, அவனிடம் வக்கிரக் குணம் பிறந்து , மேலே கூறப்பட்ட அதே குப்பைக்குள் விழுகிறான். ஏனெனில் தனக்கு எவருமே இல்லை என எண்ணியிருந்த நிலையிலே கிடைத்த அந்த பாசம் அவனை விட்டு செல்வதை அவன் மனம் விரும்பாதது என்பது இயற்கையே. அதனாலேயே அவன் போதை எனும் இன்னுமொரு உலகுக்கு
எடுத்து செல்லப்படுகிறான்.


அது போக பெரியவர்கள் என்ற பெயரிலே சிறு பிள்ளைத் தனமான செயல்களை செயும் , அவனது ஆசை எது என்பதை அறிய மறுக்கும் மனது படைத்தவர்களிடம், சிக்கித் தவிக்கும் அவன் பாவத்திலும் பாவமே. பெரியவர்கள் எனும் போது பெற்றோர் மட்டுமல்லாது அவனை சூழ உள்ள உறவுகளும் அடங்குவார்கள். அவன் படிக்க விரும்பும் துறை தொட்டு, அவன் வாழ விரும்பும் துணை வரை, அவர்காளது ஆதிக்கத்தால் அவன் சின்னா பின்னமாக்கப்படுகிறான். அவன் படிக்க விரும்பும் துறை மற்றவர்களால் தீர்மானிக்கப்படும் போது அவனுள் ஆட்கொள்ளும் சொல்லொணாத் துயரத்திற்கு அளவே கிடையாது எனலாம். ஏனெனில் அதுவே அவனது வாழ்க்கையை தீர்மானிக்கும் என அவனுக்கு மட்டுமல்ல அந்த பெரியவர்களுக்கும் தெரியும். அவர்களும் தங்களது பிள்ளை நன்றாக வர வேண்டும்மெனத் தான் முடிவெடுப்பார்கள், அவர்களது அனுபவத்தைக் கொண்டு, எனினும் அது பல சமயங்களில் சொல்லப்போனால் 85% ஆன நேரங்களில், அது நேர் எதிரான விளைவையே தெடிக் கொடுப்பதுண்டு. ஏனெனில் ஒரு மனிதனொரு விடயத்தில் சாதிக்க வேண்டுமெனில் அவன் மனதில் என்ணி செயற்பட்டாலே முடியுமே ஒழிய, அவன் அதைப் பற்றிய அக்கறையே எடுக்காத விடத்து அது எங்கணம் சாத்தியமாகும்?


அது போலவே அவனது வாழ்க்கை துணையை தேடும் படலத்தில், அவனுள் ஏற்படும் மனக் கசப்புகள் அவனை வாழ்வை விட்டுமே தூரமாக்கி விடுவதுமுண்டு. இதனால் மனமுடையும் அவன் வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் தோற்றுப் போகிறான் அவனிடத்திலேயே. இதுவே பல வேளைகளில் நிச்சயித்த திருமணங்கள் சிதைந்து போக வழி கோல்கின்றது போலும். அந்த விடயத்தில் கூட அவனது எண்ணம் அறிந்து அதிலுள்ள சிக்கல்கள் பற்றி கலந்துரையாடினால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதிலே வெற்றி கிட்டும் என்பதில்
சந்தேகமில்லை.

ஒருவனது வெற்றி தனிமையை வென்று அதிலிருந்து மீள்வதிலேயே தங்கியுள்ளது எனின் மிகையில்லை. எனவே எம் அனைவருக்குமான பொறுப்பு தான் அடுத்தவர்களின் கருத்து கொடுத்து, அதிலுள்ள சாதக பாதக நிலமைகளை ஆராய்ந்து அதன் படி முடிவெடுப்பதே சால சிறந்தது என இவ்வுள்ளத்துள்
தோன்றுகிறது.

தனிமை பற்றி எழுத நினைத்து இறுதியில் எதிலோ வந்து முடிந்திருப்பது போல தோன்றுகிறது. எதுவானாலும் நல்லதாக இருந்
தால் சரியே. இங்கே மனிதனுக்கு அவன் என பொதுமைப்பாடக குறிப்பிட்டுள்ளதை கவனிக்கவும்.





Comments

  1. Blackjack is a gambling sport the place the on line casino has an advantage. It doesn't matter what method you are taking or what 카지노 사이트 blackjack technique you comply with. Of course, winning blackjack on-line is all means down to} luck.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Unknown facts in a known sector

Taking notes on the 250th -SLC

Through my LeNsEs