இலட்சியம்.......தடம் புரலக் கூடும்


இலட்சியம்.......தடம் புரலக் கூடும்






ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவனிடம் நீ பெரியவரானதும் என்னவாக வரப் போகிராய் என எல்லா ஆசிரியர்களும் நச்சரிப்பதுண்டு. அது my self கேட்கும் ஆங்கிலப் பாட ஆசிரியருக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல. இந்தக் கேள்வி சாதரணமாக போய் விட்ட போதிலும், உள்ளர்த்தம் நிறைந்த கேள்விகளுள் இதுவும் ஒன்று. இலட்சியம் என்பதற்கு ஆங்கிலத்தில் ambition என பொருற்படும். இதற்கான சரியான விளக்கத்தை oxford அகராதி இவ்வாறு தருகிறது.(a strong desire to do or achieve something.)அதாவது ஏதாவதொன்றை செய்து முடிப்பதற்கோ அல்லது அடைவதற்கோ ஒருவரிடம் காணப்படும் தீராத ஆசை என சொல்லலாம்.

எனவே நம் அனைவருக்கும் ஏதாவதொரு இலட்சியம் கட்டாயம் இருக்க வேண்டும் என மேற்கண்ட விளக்கத்திலிருந்து புலனாகிறது. ஒரு பிள்ளை பிறந்துபிள்ளை சிறிது வளர்ந்து, அதற்கு புரிந்து கொள்ளக் கூடிய தன்மை வந்தவுடனே, அவர்கள் அந்த பிள்ளைக்கு நீ இன்னாரைப் போல வர வேண்டும் அல்லது இவரைப் போல படிக்க வேண்டும் என பல்வேறுபட்ட விடயங்களை புகுத்துகின்றனர். இதனால் அந்த பிள்ளையும் அதே மன நிலையுடன் வளர்ந்து கொஞ்சம் பெரியவனாகி ஆரம்ப கல்விக்காக பாடசாலை சென்று யாரவது ஒருவர் நீ எதுவாக வர விருப்பம் என கேட்டவுடனே, அது ஏதோ programme செய்யப்பட்ட robot ஐ போல உடனே நான் இன்னராகத் தான் வரப் போகிறோம் எனக் கூறும். அது அவ்வாறே வளரும் போது அதனது இலக்கு தொடர்பாக தன்னை அறியாமலே தகவல் திரட்டி, அதற்குள்ளும் ஆசையை ஊன்றிக் கொள்கிறது. இதை நோக்கும் போது , இந்த இலக்கு அந்த பிள்ளையுடைய சொந்த இலக்கு அல்ல, அது அவர்களது பெற்றோரின் இலக்கையே தன் இலக்காக கொண்டுள்ளது என எமக்கு புலனாகிறது. இது விடயத்தில் பெற்றோரை குறை சொல்வதற்கும் வழியில்லை. சில சமயம் அவர்கள் தங்கள் பிள்ளை இவ்வாறு இருந்தால் நன்றாக இருப்பான் என்ற எண்ணத்தில் செய்யக் கூடும் .அல்லது தங்களால் செய்ய முடியாத ஒன்றை தங்கள் பிள்ளை செய்ய வேண்டும், அதனால் அவன் வாழ்வு சுபீட்சம் ஆகும் என என்ணக் கூடும்.


சிறு வயதிலே இலட்சியம் பற்றி கேட்டவுடனே பலருமே ஒரு doctor ஆக அல்லது ஒரு engineer ஆக வர வேண்டும் என்றே கூறுவர்.சிலர் கணக்காளனாக அல்லது சிலர் உயிர்பணயம் வைக்கப்படும் தொழில்களை செய்யும் நபராக தான் வர வேண்டுமெனவும் கூறுவர். எனினும் பரவலாக கூறப்படும் கூற்று தான் எல்லோரும் டாக்டர் ஆகிவிட்டால் யார் மருந்து எடுக்க போவது? என்பது. அதுவும் உண்மை தானே. உலகத்தின் சமநிலை காக்கப்பட வேண்டுமெனின் இவ்வாறு நிகழ்ந்தாகவேண்டிய கடப்பாடு உள்ளது. இப்படியே அவர்கள் வளர்ந்து வந்து வாழ்வின் முக்கிய கட்டமான கட்டிளமைப் பருவத்தை அடைகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்படி டாக்டர் கனவு கண்ட பிள்ளையின் நிலைப்பாடு தான் என்னவாகும்? அதன் கனவு நனவானதா? அல்லது கனவாகவே கலைந்ததா?
இது சிந்திக்கப்பட வேண்டியதும், ஆராயப்பட வேண்டியதுமான ஒரு கூற்றென்பதில் ஐயமில்லை.


உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்வோம். சிறு வயதிலிருந்தே பெற்றோரினதும் , உறவினரினதும் கனவுகளுக்குள் சிக்குண்டு நான் என் இலட்சியமாக ஒரு doctorஆக வேண்டுமென்றே எண்ணியிருந்தேன். (இதற்கு என் பிள்ளைப் பருவத்தின் பல நாட்கள் வைத்தியசாலையில் கடந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்). அப்போது ஒரு "doctor pass" ஒட்டப்பட்டிருந்த காரை கண்டாலே ஒரு சந்தோசம் உள்ளுக்குள். வைத்தியசாலை சென்று பல அறுவைசிகிச்சைகள் செய்து, பெயர் புகழ் பெற்று வாழ்வில் settle ஆனதும் உண்டு கற்பனையில். அந்த கற்பனை உலகம் 10ம் தரம் முடியும் வரை என்னுடனேயே இருந்தது. சாதரண தரம் வந்ததும் விஞ்ஞானப் பாட உயிரியல் பாடங்களே கசக்க ஆரம்பித்தன. அப்போது எங்கள் வீட்டருகே புதிதாய் ஒரு பொறியியலாளர் உருவாகிக் கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்விகற்று கரை சேர முடியாமல் போனவர்கள் அனைவரும் என் முன் வரிசையாக நின்றனர். அப்படியே வீட்டிலும் சில அபாய குறிகள் காட்டப்பட்டன.


உடனே மனம் மாறியது. உயர்தரத்த்கில் கணிதப் பிரிவில் கற்று பொறியியற்துறையை தேர்ந்தெடுப்பதாக என் மனம் உறுதி பூண்டது. அவ்வாறே நாட்கள் பல கடந்து உயர்தரத்தில் சித்தியடைந்து, பல்கழையும் சென்று அங்கே விரும்பிய துறையான இலத்திரணியல் துறையை தேர்ந்தெடுத்து மூன்றாவது வருடம் நடந்து கொண்டிருக்கையில் மனம் வேறொரு துறையை செய்யும் படி ஆசையூட்டுகிறது. பார்ப்போம் (இன்ஷா அல்லாஹ்) இறைவன் நாட்டமிருந்தால் அதுவும் நிறைவேறும்.


என்னுடைய வாழ்கையிலே அதாவது 22 வருடங்களுக்குள்ளேயே இலட்சியம் என்பது மூன்று முறை மாற்றதுக்குள்ளாகியிருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல நம்மில் பலருக்கும் வெகுவாக பொருந்தும். ஒருவனது இலட்சியம் என்பது அவனிடம் மட்டுமல்ல இன்னும் பலதுக்குள் தங்கியிருக்கிறது. அப்படியான சில காரணங்களை ஒருவனது சிறு பராயத்திலிருந்து பார்வையிடுவோம்.

1. அவனது பெற்றோர், குடும்பத்தினர், உறவினர் - இலட்சியங்களை உருவாக்கும் முன்னணி இயந்திரங்கள்
2. வெகுசன ஊடகங்கள் - பத்திரிகை, சினிமா, (தற்காலத்தில் இன்னோரன்ன.......)

3. பாடசாலை , ஆசிரியர்கள், நன்பர்கள் - திருப்பு முணையான ஒரு கட்டம்

4. சூழல்

5. அவனது சுய முடிவுகள்

6. உலக சந்தை - வருமானங்களைப் பற்றியும் சிந்திப்பதுண்டு.


காலத்துடன் மாறுபடக் கூடியதொரு விடயமாகவே இலட்சியம் என்பது நோக்கப்பட வேண்டும். இது career இற்கு மட்டுமல்ல, வாழ்வின் எல்லா கட்டங்களுக்கும் பொருந்தும். எந்தொவொரு விடயமாக இருந்தாலும் எமது கடின உழைப்பும் இறைவனின் நாட்டமுமிருந்தால் நடைபெறுமென்பது நிச்சயம்.

Comments

  1. நன்றாய் சொன்னாய். மற்றவர்களின் ஆசைக்காய் தனது திறமைய மறந்தவங்களுக்கு , தனது பிள்ளை இப்படித்தான் வரவேண்டும் எண்டு நினைக்கிரவங்க்களும் கொஞ்சம் யோசிக்க வேணும்

    அப்துல்லாஹ்

    ReplyDelete
  2. Weldone. come-on my boy! Xpctng further...
    Ur friend, Rishadh Aboothalib M.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Unknown facts in a known sector

Taking notes on the 250th -SLC

Through my LeNsEs