கிறுக்கல்கள்

உன் பார்வைகளுக்கு
மட்டுமே
நான் கெட்டவனாய்
-விதி

********************************
என்னை அழவைத்துப்
பார்ப்பதில் ஏன்
உனக்கு இவ்வளவு இன்பம்
-வெங்காயம்

********************************

கண் மூடினால்
கனவும் கசக்கிறது
உன் நினைவுகளால்

********************************
இருளான இதயத்திற்கு
ஒளி கொடுக்க வந்த
மெழுகுவர்த்தி என்று
தான் எண்ணியிருந்தேன்
யாருக்கு தெரியும்
என்னையே மழுங்கடிக்கும்
எரிமலை குழம்பாய்
நீ இருப்பாய் என்று....

*********************************
கன்களும் பொய் சொல்கின்றன
உன் விடயத்தில்
சந்தோசமாய் இருப்பவனாய்
என்னை காட்டி

**********************************

முடிந்தால் சொல்லியனுப்பு
முடியவே முடியாதென்று
உனக்கும் சேர்த்து
நானே காதலிக்கிறேன்


Comments

Popular posts from this blog

Unknown facts in a known sector

Taking notes on the 250th -SLC

Through my LeNsEs