கிரிக்கற் + binary topic
விளையாட்டு தான்
எனினும் நமக்கு வினையாகி விடுமோ
என்ற பயத்தில் எழுத நினைக்கின்றேன்
ஏன் அது நம் நாட்டில் மட்டும் இப்படிப்பட்ட
முட்டாள்களை காண முடிகிறது
ஒரு நாட்டுக்குள்ளேயே எத்தனை விதமான supporters
உன்வீட்டில் நீ அடிபடும் போது பக்கத்து வீட்டுக்காரன்
பட்டாசு போட்டு சந்தோசமாய் இருப்பதை
விரும்புபவனாக நீ இருந்தால்
உன் செயலில் ஓரளவு நியாயத்தை காணலாம்......
ஆனாலும் எந்த காரணமுமின்றி
நீ இப்படி ஜாஹிலியத்தனமாய் இருப்பதை
ஏற்க மனம் விரும்பவில்லை.
நீயாகவே உன் மனதில் கை வைத்து கேள்
நீ செய்வது சரியா என்று
நாம் பெரும்பான்மையாக உள்ள
நாடுகளில் கிடைக்காத உரிமைகள் உனக்கு
இங்கே கிடைன்றதென்பதை நீ சிந்திப்பதே இல்லையா?
உனக்கென்றொரு சட்டம், உனக்கென்றொரு நீதிமன்றம்
உனக்கென்றொரு மையவாடி
ஏன் ஐந்து நேரமும் தொழுகைக்கு பாங்கு ஒலிப்பது
என்று அடுக்கிக் கொண்டே போகலாம்
கேட்டால் சொல்கிறாய் "அவன் துவே_ம்" என்று
உனக்கு உன் மண் மேல் பற்று இல்லை என்று
அவனுக்கு தெரிந்ததும் அவனில் ஏற்படும் பொறாமை
தான் உனக்கு அதுவாக தெறிகிறது போலும்
அந்த ரஸூலுக்கு அவரது பிறந்த மண் மேல் இருந்த பற்று
உனக்கு மட்டும் ஏன் இல்லாமல் போனது?
வரலாறு நெடுகிலும் எமக்கென்றிருந்த நற்பெயரை
இல்லாமல் செய்தது யார் குற்றம்?
நிச்சயமாக நம்மில் சில பேரது தான்
அவர்கள் இரத்தம் சிந்தும் போது உனக்கு
மட்டும் ஆடம்பரம் தேவைப்பட்டது
சிலருக்கு "பாத்தாலே" என்ற மகுடம் தேவைப்பட்டது
சிலருக்கு பணக்காரன் என்ற போர்வை தேவைப்பட்டது,
அதற்காக போதையை கடத்துவதில் போதையாய் போனவர்களும் உண்டு.
இன்னும் சில முதுகெலும்பற்ற அரசியல் வாதிகள்
இப்படி நாமாகவே எல்லாவற்றையும் செய்து விட்டு
இப்போது அவர்களை குற்றம் சொல்வதில் என்ன நியாயத்தை கண்டு விட்டாயோ?
உனக்கெல்லாம் உலமா சபை எத்தனை பிரசுரங்கள்
வெளியிட்டும் பலனில்லை
ஜும்மா பயானில் மௌலவி வாய் கிழிய
கத்தியும் பிரயோசனமில்லை.
இனி எங்கே நான் சொல்லி
நீ கேட்க போகிறாய்?
என்ன இருந்தாலும் நீ இப்படி எல்லாம் பேசக் கூடாது
என என்னை பார்த்து நீ கேட்பது எனக்கு புரிகிறது
என்ன செய்ய நம் வீட்டு அசுத்தத்தை நாமே அகற்றாவிடில் அது நாறி விடும்
அதற்கு இவ்வளவு பச்சையாகவா பேச வேண்டும்?
என நீ அங்கலாய்ப்பதும் எனக்கு தெரிகிறது
அதற்கும் என்ன செய்ய
கட்டாயம் பச்சையாகவே பேசி ஆக வேண்டிய தலைப்பாகிற்றே
ஏனெனில் இது ஒரு "binary topic"
ஒன்றில் பேசக்கூடாது
இல்லாவிடில் தெளிவாக பேச வேண்டும்
அவ்வளவு தான், சொல்ல நினைத்ததை சொல்லி விட்டேன்
இதற்கு மேல் எம்மிருவரிடையே எந்தவித
மனக்கசப்பும் இல்லை நன்பா
அன்று போலவே இனியும் நானும் நீயும் நன்பர்கள் தான்
Comments
Post a Comment