மனக் குரங்கு





குரங்கு அடிக்கடி கிளை விட்டு கிளை தாவும். ஏன் மரம் விட்டு மரம் தாவுவதும் அதற்கு அத்துப்படி. அதற்கு பல வேளைகளில் புரிவதில்லை எது சரி எது பிழை என்று. அதனால் தான் என்னவோ அது சரியென்று நினைத்து செய்யும் பல செயல்கள் பிழையாகிப் போனாலும் அதை ஏற்க அது மறுக்கிறது. அதனால் தானே அது ஒரே தவறை பலமுறை செய்கிறது. இது போன்ற செய்கைகளுக்கு உதாரணத்தின் தனித்துவம் குரங்காராய் தான் இருக்க முடியும்.

சும்மாவா நம் முன்னோர்கள் சொன்னார்கள் "குரங்கு கையில் பூ மாலை போல்" என்று. பூமாலை கிடைத்த குரங்கு அந்த பூ மாலையை என்னென்னவெல்லாம் செய்யும் என்று நான் சொல்லித் தன் தெரிய வேண்டியவர்கள் அல்லர் நீங்கள். ஏனைய ஐந்து அறிவு ஜீவிகளுடன் ஒப்பிடுகையில் குரங்குக்கு ஒரு தனித்துவமான் இடம் நிச்சயம் உண்டு என்பதில் மறுப்பதற்கு இல்லை.

வித்தைகள் காட்டி சீவனம் நடாத்தும் குரங்காட்டியிடம் உள்ள குரங்கு மட்டும் ஏதோ வித்தியாசம் தான். ஏனெனில் அதற்கு தெரிகிறது நாம் வெளியில் தனியே சென்று பழக்கப்பட்டவனும் கிடையாது , கூட்டமாக வாழ்ந்த முன் பின் அனுபவங்களும் கிடையாது. எனவே எஜமான் சொல்வதை கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. கேட்காவிட்டால் நமது பட்டினிக்கு நாமே காரணமாகி விடுவோம் .ஆகவே இவன் சொல்வதை கேட்பதில் எனக்கேது குறைந்து விடப் போவதில்லையே.




Terror!!!!!!!!!



போனால் போகட்டும் நம்மால் ஒருவன் உழைப்பது நமக்கு தானே பெருமை என்ற positive approach குரங்கிடம் இருக்கிறது. கவனிப்பே இல்லாது குரங்காட்டியிடம் உள்ள குரங்கு மாத்திரமே தப்பித்து சென்று நாம் செத்தாலும் இவனுக்கு உழைத்து கொடுத்து விடக் கூடாது என்ற வைராக்கியத்தில் சிங்கமாக வெளியே சென்று அசிங்கப்படுவது ஏதோ உண்மை தான். காமடி என்னவென்றால் இவ்வளவு terror ஆக யோசிக்கத் தெரிந்த குரங்கிற்கு சாதாரண பிழைகள் தெரியாமல் போனது தான்.ஒரு வேளை மனிதனை பேய் காட்டுவது என்பதில் குரங்கிற்கு சந்தோஷமோ என்னமோ ? யார் கண்டார்.என்ன இது குரங்கை பற்றிய research ஓ என்று நீங்கள் நினைக்கலாம். அப்படிப் பட்ட தப்பெல்லாம் நான் செய்ய மாட்டேன்.


மனிதனின் மனமும் குரங்கைப் போலவே தான்.குரங்கைப் போலவே அதன் ஆசை அடிக்கடி தாவும் . எப்போதும் ஒன்றை விட இன்னொன்று better தான் என்பதை மனம் பல வேளைகளில் விட்டுக் கொடுப்பதே இல்லை.அதனால் தான் என்னமோ எப்போதும் எங்கும் பல பிரிவுகள், சஞ்சலங்கள், பிணக்குகள். உடுத்தும் உடை தொட்டு, காலுக்கு போடும் செருப்பு ,............., என நீண்டு வாழப் போகும் தன் துணை வரை அந்த மனம் எனும் மாயை அடிக்கடி மனிதனை திசை திருப்பும். என்னை பொருத்தவரை மனதை ஒருநிலை படுத்த தெரிந்தவனே ஒரு சிறந்த வீரன் என்பேன்.

மனதிற்கு பல சமயங்களில் தெரிவதில்லை நாம் செய்வது சரியா? தவறா? என்று. ஆனால் தவறு செய்து விட்டு மனம் வருந்த அதற்கு தெரியும்.அந்த வகையில் அது குரங்கிலிருந்து கொஞ்சம் டிவியேட் ஆகிறது. ஆனால் பல வேளைகளில் அது அதே தவறை திரும்ப செய்வதால் அது குரங்கு தான் என மறுபடியும் நிரூபிக்கும். ஆண் மனம், பெண் மனம் என்று இரண்டு உள்ளதாம். அதில் ஒன்று எதையுமே ஒரு வித இச்சையுடன் தான் பார்க்குமாம். அதை அடைந்தே தீர வேண்டும் என்கிற ஆசையை தான் இச்சை என்றேன். மற்றையது எல்லாவற்றையுமே சந்தேகத்துடனேயே பார்க்குமாம் ஒருசிலவற்றைத் தவிர. இதில் நான் சொன்னது முன்னைய மனங்களின் வரிசைப்படி தான் என நான் காட்டி கொடுக்க விரும்பவில்லை.


குரங்கை ஒரு வழிப் படுத்தும் குரங்காட்டி போல மனதை வழிநடத்தக் கூடிய ஒருவரோ அல்லது ஒரு பொருளோ இருப்பின் மனம் கொஞ்சம் சொல் பேச்சு கேட்டு நடக்கும். மாறாக அந்த வழி நடத்தி நம்மை அடிமைப் படுத்துகிறார் எனில் மனம் உடனே வேறு ஒரு வழி நடத்தியை தேடிக் கொள்ள முயல்வது ஏதும் வியப்பில்லையே, ஏனெனில் மனிதன் தான் ஆறறிவு ஜீவன் ஆச்சே. இந்த ஒரு sense கூட இல்லா விட்டால் பிறகு என்னத்துக்கு. ஆனால் இங்கேயும் குரங்கின் நிலை தான் அதற்கு, பல வேளைகளில் சிங்கமாக வெளியே போய் வேறு இடத்தில் அசிங்கப் பட்டு நிற்கும். அப்போது அது நினைக்கும் தேடிப்போன சீதேவியை விட தன்னோடு இருந்த மூதேவியே better என்று. சரி என்ன தான் முடிவா சொல்கிறாய்? என நீங்கள் கேட்பது புரிகிறது. முடிவு சொல்ல நான் என்ன பட்டி மன்ற தலைவரா? இல்லை பஞ்சாயத்து தலைவரா?. முடிவு உங்கள் கைகளில்.மனிதனை அலைக்கடிப்பதில் மனதுக்கும் சந்தோஷம் போல குரங்கைப் போலவே


நான் இதில் ஒருவரையும் காயப் படுத்த வேண்டுமென எழுதவில்லை. அப்படி எழுத வேண்டுமெனில் இதை விட தணிக்கைக்கு போட்டால் வெள்ளை பேப்பர் தான் மிஞ்சும் என்ற அளவுக்கு எழுதலாம்.புரிபவர்களுக்கு புரியும் என்பது நிதர்சனம்.ஆனாலும் வாசிக்கும் நீங்கள் முட்டாள்கள் இல்லை என்பது எனக்கு தெரியும்.


புத்திசாலி குரங்கு

Comments

  1. Very Nice. I think a good one for all of us.

    ReplyDelete
  2. //தணிக்கைக்கு போட்டால் வெள்ளை பேப்பர் தான் மிஞ்சும்//
    Rishadh Aboothalib M likes this :D

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Unknown facts in a known sector

Taking notes on the 250th -SLC

Through my LeNsEs