சும்மா இருக்க முடியாமல் கிறுக்கியவை
பௌர்ணமி இரவில்
வீட்டுக்கு வெளியே வந்துவிடாதே
என் தெரியுமா?
உன் அழகிற்கு
அந்த நிலவும் எதிரியாகிவிடும்
உன் நண்பிகளைப் போலவே
பாவம் அந்த நிலவு மட்டுமாவது
உன் நண்பியாய் இருந்து விட்டு போகட்டும்
*********************************************
மீனுக்காக தவமிருக்கும்
கொக்கைப் போல
உன் sms இற்காக
காத்திருக்கும் நான்
*********************************************
பெண்ணை நிலவிற்கு
ஒப்பிடுபவர்கள் மத்தியில்
உன் விடயத்தில் வித்தியாசமானவனாய்
நான்
ஏனெனில்
உன்னுடன் ஒப்பிடும் போது
நிலா இரண்டாமிடம் தான்
*********************************************
என்னை வரச்சொன்ன நீ
உன் வீட்டு முற்றத்தையே
முறைத்த வண்ணம் ...
நீ காதலிப்பது
என்னையா? இல்லை
உன் வீட்டு முற்றத்தையா?
*********************************************
"நான்" என்பதன் பொருள்
"நீ" என நினைத்த எனக்கு
"நீ" என்பது "நான்" இல்லை
என்பதை
நினைக்கத் தெரியவில்லை
*********************************************
நீ என்னை விட்டு சென்றாலும்
என் மனக் கண்ணின்
நீர் துளிகள்
இன்னும் பதிலளிக்கின்றன
உன் கடைசி வார்த்தைகளுக்கு
*********************************************
உன்னை தரிசிக்கவே
தவமிருந்த என் கண்கள்
தன் தவறை உணர்ந்தன
"போ" என்று சொன்ன
உன் பார்வையால்
*********************************************
ரயில் பயணமானது
என் வாழ்க்கை
உன் பச்சோந்தி பேச்சுகளால்
எப்போதாவது , ஏதாவதொரு
ரயில் நிலையத்தில்
இறங்கப் போவது
எனக்கு உறுதியாகி விட்டது
*********************************************
இது தான் நீ
என எப்போதோ காட்டியிருந்தால்
நான் நானாகவே இருந்திருப்பேன்
நீயாக மாற
முயற்சிக்காமல்
*********************************************
Nice ones....
ReplyDeletesuperb lines.......kit
ReplyDelete