சம்பந்தமில்லாமல்..............

சம்பந்தமில்லாமல்............... நுணிப் புல்லில் பனி படர்ந்திருந்த வேளை , சூரியன் தன் கதிரை சற்றே விரிக்கும் வேளை ,பறவைகளின் கீச்சிடும் ஒலியை கேட்டவண்ணம், எழுந்த நான் படுக்கைக்கு கிட்டவே வந்த "bed coffee" ஐயும் அருந்தினேன். bed coffee என்றதும் நினைவுக்கு வந்தது.... கட்டிலில் படுத்தெழுந்தவுடன் அருந்தினால் bed coffee என்றால், பாயில் படுத்தெழுந்தவன் அருந்தும் போது அது "mat coffee" ஆகி விடுமோ? அது அப்படி இருக்கட்டும் சென்றவாரம் ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டியதானது.(அழையா விருந்தாளியாக அல்ல என்பதை கவனத்தில் கொள்க). அங்கே சென்ற போது மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஒரு கவிதை மனதில் எண்ணியது, கொஞ்சம் அதையும் தான் பார்ப்போமே?(எவ்வளவோ பண்ணிட்டோம் , இத பண்ண மாட்டோமா?) இரு மனம் இணயும் இந்தத் திருமணம் நறுமணம் கமலும் சோலைவணமாக மாறா இந்தத் தனி மனதின் வாழ்த்துக்கள். மாறாக ஒரு மனமாய் மறுபடியும் இரு மனங்களாக மாறி மறுமணம் புரியாமல் வாழ இனி மனதில் உறுதி கொள்க. எப்படி? மேல் வரி ஒ.கே, அடுத்ததையும் சொல்லியிருந்தால், கண்டிப்பாக பலரது க...