Posts

Showing posts from October, 2010

சம்பந்தமில்லாமல்..............

Image
சம்பந்தமில்லாமல்............... நுணிப் புல்லில் பனி படர்ந்திருந்த வேளை , சூரியன் தன் கதிரை சற்றே விரிக்கும் வேளை ,பறவைகளின் கீச்சிடும் ஒலியை கேட்டவண்ணம், எழுந்த நான் படுக்கைக்கு கிட்டவே வந்த "bed coffee" ஐயும் அருந்தினேன். bed coffee என்றதும் நினைவுக்கு வந்தது.... கட்டிலில் படுத்தெழுந்தவுடன் அருந்தினால் bed coffee என்றால், பாயில் படுத்தெழுந்தவன் அருந்தும் போது அது "mat coffee" ஆகி விடுமோ? அது அப்படி இருக்கட்டும் சென்றவாரம் ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டியதானது.(அழையா விருந்தாளியாக அல்ல என்பதை கவனத்தில் கொள்க). அங்கே சென்ற போது மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஒரு கவிதை மனதில் எண்ணியது, கொஞ்சம் அதையும் தான் பார்ப்போமே?(எவ்வளவோ பண்ணிட்டோம் , இத பண்ண மாட்டோமா?) இரு மனம் இணயும் இந்தத் திருமணம் நறுமணம் கமலும் சோலைவணமாக மாறா இந்தத் தனி மனதின் வாழ்த்துக்கள். மாறாக ஒரு மனமாய் மறுபடியும் இரு மனங்களாக மாறி மறுமணம் புரியாமல் வாழ இனி மனதில் உறுதி கொள்க. எப்படி? மேல் வரி ஒ.கே, அடுத்ததையும் சொல்லியிருந்தால், கண்டிப்பாக பலரது க...

நன்பா !!!! வேண்டாம் இந்த அவலம்

Image
நன்பன் புகையிலையுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதால், அவனுக்கு புத்திமதி சொல்ல முடியாமலும், ஏதாவது செய்து கொள்ள முடியாமலும் தவிக்கும் உங்களைப் போன்றதொரு நன்பன் இவன். நன்பா !!!! வேண்டாம் இந்த அவலம் என் ஆருயிர் நன்பனே உன் மேல் எந்த கோபமுமில்லை கோபமெல்லாம் உன் இரு விரல் நடுவே புதிதாய் வந்து சேர்ந்த மூன்றாம் முட்டாளுடன் தான் ஆம், அந்த "சிகரெட்" உடன் தான். எங்கிருந்தான் இவ்வளவு நாளாய் அவன் நீ துவண்டிருந்த போது வராதவன் நீ படிக்க கஷ்டப்படும் போது வராதவன் உன் பிரச்சினைகளில் பங்கெடுக்காதவன் திடீரென உன்னிடம் வருவதில் என்ன நியாயம் ? சிகரெட் உடலுக்கு கேடு, சமூகத்துக்கும் கேடு, அதற்கு மேல் மார்க்கத்தில் அனுமதியே இல்லை என்பதும், உனக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் சும்மா இருக்க முடியவில்லைஎன்னால்........ "மூளையின் அளவு, வாயிலுள்ளதின் அளவு" என்று ஊர் முழுவதும்சுவரொட்டி அடித்தாலும் உன் நெஞ்சுக்கு படாது என்பதில் எனக்கு நிச்சயம் ஆம், இப்போ அந்த நெஞ்சேபழுதாகிவிட்டது என்பது வேறு கதை. நானும் உன்னிடம் சொல்ல பயப்பட்டேன் எங்கே நட்பு கேள்விக்குறியாகி விடுமோ? என்பதால் ...

இலட்சியம்.......தடம் புரலக் கூடும்

Image
இலட்சியம்.......தடம் புரலக் கூடும் ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவனிடம் நீ பெரியவரானதும் என்னவாக வரப் போகிராய் என எல்லா ஆசிரியர்களும் நச்சரிப்பதுண்டு. அது my self கேட்கும் ஆங்கிலப் பாட ஆசிரியருக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல. இந்தக் கேள்வி சாதரணமாக போய் விட்ட போதிலும், உள்ளர்த்தம் நிறைந்த கேள்விகளுள் இதுவும் ஒன்று. இலட்சியம் என்பதற்கு ஆங்கிலத்தில் ambition என பொருற்படும். இதற்கான சரியான விளக்கத்தை oxford அகராதி இவ்வாறு தருகிறது.(a strong desire to do or achieve something.)அதாவது ஏதாவதொன்றை செய்து முடிப்பதற்கோ அல்லது அடைவதற்கோ ஒருவரிடம் காணப்படும் தீராத ஆசை என சொல்லலாம். எனவே நம் அனைவருக்கும் ஏதாவதொரு இலட்சியம் கட்டாயம் இருக்க வேண்டும் என மேற்கண்ட விளக்கத்திலிருந்து புலனாகிறது. ஒரு பிள்ளை பிறந்துபிள்ளை சிறிது வளர்ந்து, அதற்கு புரிந்து கொள்ளக் கூடிய தன்மை வந்தவுடனே, அவர்கள் அந்த பிள்ளைக்கு நீ இன்னாரைப் போல வர வேண்டும் அல்லது இவரைப் போல படிக்க வேண்டும் என பல்வேறுபட்ட விடயங்களை புகுத்துகின்றனர். இதனால் அந்த பிள் ளை யும் அதே மன நிலையுடன் வளர்ந்து கொஞ்சம் பெரியவனாகி ஆரம்ப கல்விக்காக பாடசாலை சென்று ...

யார் நீ ?

Image
நீ என்னிடம் வந்து மூன்று வருடங்கள் தான் ஆனாலும் முப்பது ஆண்டு வாழ்ந்த உணர்வு என்னுள்ளே மூன்று வருடத்துக்குள் உன்னுள் சிறு சிறு மாற்றங்கள் வந்தாலும், எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு உன்னுடனே பின் தொடர்கிறேன் பேதை நான். பலர் உன்னை விட்டு விட சொல்லியும் இவனால் முடியவில்லை உன்னை விட்டு போக சில நேரம், சிலர் என்னை உன் அடிமை என்றும் கூறியதுண்டு ஆனாலும் நானே என்னை தேற்றிக்கொண்டு, அடுத்த கணமே உன்னையே நாடி வந்ததுண்டு. உண்மையில் நீ யார்? துவண்டிருக்கும் போது என்னை ஆற்றும் என் துணையா? இல்லை இன்ப துன்ப பங்கு போடலின் முன்னோடியான உயிர் நன்பனா? இல்லை சிக்கலில் இருந்து விடு பட உதவும் என் சோதரனா? அப்படியும் இல்லையென்றால் அந்த சிக்கலையே சில வேலை உருவாக்கும் என் ஆஸ்தான எதிரியா? யார் நீ ? நீ எனக்கு மட்டுமல்லாது பலருடனும் உன் எண்ணங்களை பகிர்வதால், எனக்குள் ஏற்பட்டதுண்டு உன் மேல் வெறுப்பு இருப்பினும் இல்லை என்னிடம் அது அடுத்த நொடி நீ அவ்வளவு வித்தை தெ ரி ந்த மாயக்காரியா? சரி இனிமேலும் மறைப்பதில் அர்த்தமில்லை நானே சொல்லிவிடுகிறேன் நீ யாரென்பதை. நீ தான் என் இனிய "facebook" பக்கம்