Posts

Showing posts from August, 2010

மை உம் நாமும்

Image
"மை" உம் நாமும் அழிக்க வேண்டியது - இயலாமை உஷ்னத்தினால் நாடுவது - குளிர்மை பலத்தைக் கூறுவது- வல்லமை மக்களை வாட்டுவது- வறுமை மனிதனை அழிப்பது- பொறாமை கொள்ளக் கூடாதது- பகைமை கொள்ள வேண்டியது- பொறுமை கொல்ல வேண்டியது - சிறுமை விலை மதிப்பற்ற பருவம்- இளமை இளமையில் வரக்கூடாதது - ஏழ்மை நல்லவர் செய்வது- நன்மை நல்லோரல்லாதோர் செய்வது - தீமை நான் வெறுப்பது - தனிமை ஒன்றுமே இல்லாதது - வெறுமை எம்முள் வரக்கூடாதது - வேற்றுமை சொல்லில் இருக்க வேண்டியது - வாய்மை வாழ்வில் இருக்க வேண்டியது - எளிமை பேச்சில் தெரிய வேண்டியது - இனிமை நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை - தன்மை மற்றவருக்கு செய்யக் கூடாதது - கொடுமை உலகம் விரும்புவது - பசுமை முடிந்தளவு ஒரே சமயத்தில் முயற்சித்துள்ளேன். ஏதும் விடுபட்டிருந்தால் அறியத்தரவும்

அந்த ஒரு கணம்

Image
அந்த ஒரு கணம் பரபரப்பான அந்த காலையில் நேரமோ ஒரு ஏழு இருக்கும் office வேலைகள் ஒவ்வொன்றாக ஒரு presentation ஒரு discussion ஒரு filed visit ஒரு interview என எல்லாமே அவன் கண் முன் தோன்ற அவனோ யார் யாரையோ அநியாயத்திற்கு திட்டியபடி பலதோடு ஒன்றாக காலி வீதியில் தனிமையில் காரை செலுத்தும் ஜீவன், தற்போதைக்கு தனிமரம் இரண்டு மூன்று நாட்களாக கவனிப்பாரற்றவனாய் வயிற்றைக் கூட நிரப்ப மறந்தவனாய் எது செய்வதென்று அறியாமல் பேதலித்தவனாய் ஆயிரம் கற்பனைகளோடு ஒரு வேற்று கிரகத்திலே வாழ்க்கையை ஓட்டியவனாய் காரணம் ஏனோ? தலைப் பிள்ளையைப் பெற்றெடுக்கும் பிரயாச்சித்தத்தில் அவன் மனைவி ஆஸ்பத்திரியில் இதற்கிடையே காருக்கு கட்ட வேண்டிய leasing ஒரு பக்கம் உயிர் நண்பனுக்கு பணவுதவி செய்ய வேண்டிய கட்டாயம் ஒரு பக்கம் அடுத்த மாதம் மணவாழ்க்கையில் இணையப்போகும் தங்கை ஒரு பக்கம் பிள்ளையின் ஏழாம் நாளை விமர்சையாக கொண்டாட வேண்டுமென்ற தம்பதியினது அவா ஒரு பக்கமென பற்பல பணச்சுமைகளை சுமந்தவனாய் அவன் இபடியே நினைத்துக்கொண்டே செல்லும் அவனை யாரோ தடுத்து நிருத்தியதை அவனும் உணரவே திடுக்கிட்டு நினைவுக்கு வரவே சுற்றும் பார்க்க அலரியபடி நின்றது அவனது ...
முதல் சந்திப்பு நம் உதடுகள் மௌனித்தாலும் கண்கள் கைத்தட்சிட்டன இதயப் பரிமாற்று ஒப்பந்தத்தில் இரவு சூரியன் கூட ஓய்வில் ஆனால் சதா உன்னை நினைத்த வண்ணம் என் இதயம் நிஜம் நீ அழ்கானவள் என்பதற்காய். நான் உன்னை காதலிக்கவில்லை நான் காதலிப்பதால் என்னவோ நீ எனக்கு அழகாய் தெரிகிறாய் நிறம் வெண்சிரிப்பு, செவ்வாய், கருவிழி, மஞ்சள் கண்ணம் அறிந்தேன் நிறங்களை உன்னில் ஒப்புவமை பெண்ணை நிலவென்றது அன்று இன்றோ நானொரு புது முயற்சியில் நிலவை உனக்கு ஒப்பித்துட ! பாவம் நான் உள்ளுக்குள்ளே செத்துப் பிழைத்தேன் நான் பதிலுக்காய் காத்திருந்த காலங்களில் வேண்டாம் ! வார்த்தைகளை அள்ளி வீசாதே எனக்கும் உண்டு உனக்கு உள்ளது போல இதயமொன்று !
உண்மை என் மீதி வாழ்வு இதயத்தின் ஓரத்தில் வாழும் உன் நினைவுகளில் மாயம் வந்தாய் அதே போல சென்றாய் இடைவெளிக்குள் இதென்ன புதிதாய்? ஏமாற்றம் முகவுரை என எண்ணிய எனக்கு முடிவுரை எழுதியது உன் மூன்று வர்த்தை பதில் ஐயோ ! தொந்தரவு வேண்டாம் என்று சென்றாய் நீயும், ஆனால் இன்றுவரை தொந்தரவு செய்யப்படுகிறேன் நான் ஏக்கம் அடிக்கடி பார்க்காவிடினும் பார்க்கும் ஒரு முறையாவது புன்னகையுடன் பார் !!!! நீ இருட்டிலிருந்த இதயத்தை ஒளியேற்றிய மெழுகுவர்த்தி ஏமாற்றம் பாவம் பட்டாம்பூச்சி கூட ஏமார்ந்து போனது பூவென உன்னை எண்ணி
ஹைக்கூ - 1 மறக்கத் தெரியா மானிடனின் நொண்டிச் சாட்டு - நினைவு - தோல்வியடைந்தவன் போட்ட பிச்சை - வெற்றி - பெண்களுக்கே உரியதென்றாலும் வித்தியாசமாய் உன்னிடம் - நாணம் - மாறியது என் இதயம் வெள்ளைத் தாளாய் உன் வருகையால் இணைய முடியா உதயமும் அஸ்தமனமுமாய் - நீயும், நானும் - உணர்ந்தேன் அனைத்திலும் உன் பதிலுக்காய் காத்திருக்கையில் - வெறுப்பு - கண் மூடினால் கனவும் கசக்கிறது உன் நுனைவுகளால் அரசியல்வாதிக்கு குழந்தை பிறந்தது வாழ்க ! வாழ்க ! என்றவாறு குடிகாரன் பேச்சாய் போகும் சொல் வீச்சுகள் - அரசியல் வாக்குறுதிகள் - என்னை பொய்யாக்கிய, மெய் - நீ - என் பேனா கூட மறுக்கிறது உன்னை நினைக்க ! எம் பிரிவால் வீணாய் சிக்கித் தவிக்கின்றன - நம் இதயங்கள் - பார்வைகள் இல்லாவிட்டாலும் நாமும் காதலிப்போம் நம்பிக்கையால்....
Image
சில வரிக் கதைகள் - 1 சீதனம்? "இந்த சீதனம் எனும் பிச்சை எடுக்கும் பிழைப்பு எனக்கு வேண்டாம். நீங்கள் உங்கள் மகளை கட்டிய புடவையுடன் அனுப்பி வைத்தாலே போதும். உங்கள் மகளை ராணி மாதிரி வைத்துக்கொள்வேன்". என்று தொலைக்காட்சி தொடர்கதையில் நாயகன் ,நாயகியின் அப்பாவிடம் சொன்னதுமே மாலாவுக்கு ஒரே சந்தோசம். மாலா சீதனக் கொடுமையால் திருமனமாகாமல் 35 வயதை தாண்டியிருக்கும் ஏழைப் பெண். பொய் வேஷம் பெண் என்றால் பேய் பெண்ணே உலகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆணிவேர் பெண்ணில்லாத உலகே என் கனவுலகு என எவ்வாறெல்லாம் பெண்ணை (வர்ணிக்க?) முடியுமோ அப்படியெல்லாம் கவிதை பாடிய தொழில்முறை கவிஞன் திடீரென மௌனியானான் , வார்த்தைகள் வராமல், அவன் முன்னால் அவனது அழகிய புதிதாய் திருமனம் முடித்த அவன் மனைவி தேனீருடன்....... மாற்றம் !! குடிக்கிறான்.........குடிக்கிறான்.......அவனால் முடியவில்லை அவனை விட்டு பிரிந்து சென்ற அவளை மறக்க. ஞாபகச் சுமைகளை மீட்டுகிறான் அவன். இனிமையான அவன் இளமை வேட்டு வைக்கப்பட்டதை தான் அவனால் பொறுக்க முடியவில்லை.அவள் மேல் உள்ள கோபமோ அவளை கண்டாலே கொன்றுவிடுமளவுக்கு. அவளை எப்படியும் பழி வாங்கி விடும்...
Image
ஏன் இந்த கொடுமை???? அதை நினைக்கையிலே............ தலை சுற்றுகிறது மூளை சிந்திக்க மறுக்கிறது கண்களோ இமைகளையும் சேர்த்து மூடிக் கொள்கின்றன உள்ளமோ விரும்ப மறுக்கிறது நரம்புகள் பின்னிப் பிணைகின்றன இதயத் துடிப்பு அதிகரிக்கவே இரத்த ஓட்டம் ஆர்முடுகளடைகின்றது வேதனைகள் உணரப்படுவதோடு சோதனைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன கால்களோ நடக்க சோம்பல் படுகின்றன மொத்தத்தில் முழு உடலும் செயற்பட மறுக்கிறது....... போதாக்குறைக்கு இயற்கையும் சில தடைகளுடன் விளையாடுகின்றன என்னுடன்...... ஏன் இத்தனை சிக்கல்கள் நாளை மறுநாள் மறுபடியும் ஆரம்பிப்பதாலோ...................
Image
HIJAB எனும் காவலரண் இந்தப் பதிவு "தமிழச்சி.com" இலே 2010-08-02 திகதியன்று வெளியான கவிதைக்கு பதிலளிக்கும் நோக்கில் எழுதப்பட்டது. தமிழச்சி.com வெளியான கவிதையைப் பார்க்க கீழுள்ள link ஐ பயன்படுத்தவும். http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=03&article=2164 இந்தப் பதிவில் Dr.Zakir Naik அவர்களின் Most Common Questions asked by Non- Muslims என்ற நூல் உதவிக்கு பெறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க. அன்பின் சகோதரியே அல்லது சகோதரனே "தமிழச்சி.com" எனும் இணையத் தளத்திலே தான் யாரென்பதையே தெரியாமல் அதை மறைக்க எதை எதையோ சொல்லி நழுவத் தவிக்கும் பேதையே நீ முஸ்லிம் சகோதரியை பார்த்து கேட்ட கேள்விகள் இரண்டு இரண்டுக்கும் விடை உண்டு எம் புனித நூலாம் அல்-குர்ஆனில் இருந்தாலும், என்னால் முடியவில்லை அதை இந்த நடையில் எழுத உன்னைப் போன்றவர்களுக்காகவே இதற்கான பதிலை, தந்துள்ளார் ஓர் இஸ்லாமிய அறிஞர் படித்துப் பார் உனக்கும் புரியும் நீ கேட்ட கேள்விக்கு பதில் அதிலே ஆனால் நீ தான் தமிழச்சி ஆச்சே..... ஆங்கிலத்தில் இருப்பதால் சிக்கல்கள் இல்லையே? http://www.islamforsalvation...

அநுபவப் பகிர்வு - 1 கண்டிக்கு நாங்கள் புதிது

Image
அநுபவப் பகிர்வு - 1 கண்டிக்கு நாங்கள் புதிது இலங்கையிலே எல்லா விடயங்களையும் ஒரே ஊரிலேயே பெற்றுக் கொள்ள முடிவதில்லை, என்பதை நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ளத் தேவையில்லை என்பது யதார்த்தமான உன்மை. இலங்கையர் என்ற வகையில் எல்லோரும் ஏதாவது ஒரு தேவை நிமித்தம் எப்போதாவது ஒரு நாளிலாவது கொழும்பை நோக்கி படையெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேரிடும்.இதற்கு நான் மட்டும் விதிவிலக்கள்ள. ஆனால் இந்தப் பதிவோ கொழும்பைப் பற்றியதல்ல. இது கண்டியைப் பற்றியது. 2005ம் ஆண்டளவில் எமது பிரதேச பாடசாலையில் கணித, விஞ்ஞானப் பிரிவுகள் இல்லாத படியால் பிற பிரதேசங்களுக்கு சென்று எம் உயர்தர கல்வியை தொடர வேண்டிய துர்ப்பாகிய நிலை. நானும் எனது மூன்று நன்பர்களும் (பலரும் படித்தனர், இருப்பினும் இவர்கள் 3 பேரும் பால்ய சிநேகிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ) சிதறிச் செல்ல வேண்டிய நிலை, இருப்பினும் மனதோரத்தில் சிறியதாகஒரு சந்தோசம், ஏனெனில் நால்வரும் கண்டிக்குத் தான் மேலதிக வகுப்புகளுக்கு வர வேண்டும்.
Image
கவிதைப் பதிவு - 1 நிஜம் கண் மூடியும் தூக்கமில்லை மனதில் எம் கசப்பான அநுபவங்கள் புரிகிறது நீ விளையாட்டாக சீண்டியவைகளும் அர்த்தம் தருகின்றன, உன் பிரிவுக்கு பின்னால்...... யதார்த்தம் உண்மைகள் கசப்பதும் எதிர்ப்பார்த்த உறவுகள் அகல்வதும் ஞாபகங்கள் வலிப்பதும் தான் உலக நியதி எனின் யாரால் முடியும் அதை மாற்ற அந்த இறைவனைத் தவிர..... ஒப்புவமை நிலவையும் பெண்ணையும் உவமிப்பது சரிதான் காரணம்? இரண்டுமே புரியாத புதிர்கள் !!!! தாமதமான உண்மை நீ நான் என்றாய் அன்று உணர்கிறேன் இன்று, நான் நீயாக இருந்திருக்க கூடாதா என்று !!!! மௌனி உன் விடயத்தில் மௌனியானேன், நடப்பது எல்லாம் ந்ல்லதுக்கே என் மனதை தேற்ற......... தேடல் படலம் பதில் தேடும் வேட்டையில் நான் ஏன் என் சந்தோசம் சிறை வைக்கப்பட்டது? என்பதற்கு.........
Tamil கொலையா? இல்லை ஆங்கில murder ஆ? மடிக்கணனியயை இயங்கசெய்தவுடன் தொடங்கு திரை இல் இரு வேரு தெரிவுகளில் ஒன்றான நுண்மென் ஜன்னல்கள் 7 ஐ இயக்கி எனது பாவிப்பான் பெயரை தெரிவுசெய்து வழி சொல் ஐ கொடுக்கவே இயங்கத் தொடங்கியது என் கணனி முதலில் ஓரிரு காரியாலய வேலைகள் செய்யும் நோக்கில் நுண் மென் காரியாலயம் 2007 ஐ திறந்து முதலில் நுண் மென் வார்த்தை 2007, அதிலொரு ஆவணம் பின் நுண்மென் வலுப் புள்ளி 2007 இல் ஒரு ப்ரெஸென்டடிஒன் அத்தோடு நின்றுவிடாமல் நுண்மென் வழி, நுண்மென் தகவல் பாதை, நுண்மென் ஒரு குறிப்பு மற்றும் வெளிப்பார்வையையும் இயக்கி விட்டு என் கண் சென்றது இணைய கண்டுபிடிப்பான் ஐ நோக்கி முதலில் ஜி-அஞ்சல் சென்று நோட்டமிட்டு அதன் பின் சென்றேன் வதனப் புத்தகம் தளத்திற்கு அதிலே விமர்சனங்களுக்கு பதில் எழுதி விட்டு இருந்த ஓரிருவரிடம் வீன் பேச்சு பேசி விட்டு அப்படியே புதிதாய் ஒரு ஜன்னலில் எனது வெற்றிடம் சென்றேன் வெரிச்சோடியிருந்த அதை விட்டும் விலகினேன் நான் பின் பதிவுதளம் செல்லும் முயற்சியில் தோற்றுப் போய் நெருப்பு நரி வலைத் தேடுவான் ஐ நாடினேன் நான் அதிலே வெற்றி பெறவே பதிவையும் மேற்கொண்டு உடனே ...